

உலகம் இயலும் மனிதர்களுக்காகவே (abled persons) இயங்கிக்கொண்டிருக்கிறது என்று சொன்னால், அதில் தர்க்கம் இல்லாமல் இல்லை. மாற்றுத்திறனாளிகளின் நலனுக்காக மாற்றுத்திறனாளி அல்லாதோரும் குரல் கொடுக்க வேண்டும் என்பது முக்கியமான வாதம்.
அதேவேளையில், தங்களின் பிரச்சினைகளுக்கான குரல்களைத் தாங்களே எழுப்புவதற்கும் அவர்களுக்கு உரிமை உண்டுதானே! அப்படியென்றால், அவர்களுக்கான பிரதிநிதித்துவம் எல்லா மட்டங்களிலும், எல்லா தளங்களிலும் இருக்க வேண்டும். அந்த இலக்கை நோக்கிய பயணத்தில் பல மைல்கற்களைக் கடந்திருக்கிறோம். பயணம் இன்னும் நீள்கிறது!