

‘வேறு எந்தத் துறையில் வேண்டுமானாலும் செயற்கை நுண்ணறிவு நுழைந்துவிடலாம், பரவலாகலாம். ஆனால் வாடிக்கையாளர் சேவை என்கிற பிரிவுக்குள் அதனால் நுழைந்துவிட முடியாது’ - இப்படி ஒரு கண்ணோட்டம் சிறிது காலத்துக்கு முன்பு வரைகூட இருந்தது.
பழைய பார்வை: இந்தக் கோணத்துக்குப் பல நியாயமான காரணங்கள் உண்டு. ஒரு வாடிக்கையாளர் தனக்கு ஏற்பட்ட அதிருப்தியைப் பலவித கோணங்களில் வெளிப்படுத்தும்போது, அதை நிறுவனத்தின் ஊழியர்கள் (அதாவது மனிதர்கள்) சரியாகப் புரிந்துகொள்ள முடியும். அதற்கேற்றாற்போல் பதிலளிக்க முடியும்.