

என் கண்ணாடியைச் சரிசெய்துகொண்டு செய்மெய்யை நோக்கினேன். அந்த மனித உருவ ரோபாட் வழக்கம்போலத் தன் தலையை 15 டிகிரி வலப்பக்கம் சாய்த்துக்கொண்டு காத்திருந்தது: “எலிசா மாதிரி வேற என்னவெல்லாம் வந்ததுன்னுதானே கேட்கப்போறீங்க, அதானே?” ஆம்! என்று தலையசைத்தேன் செய்மெய் தொடர்ந்தது.
“தொடக்கக் காலத்தில் பல ஆராய்ச்சிகள் நடந்தன. இப்போ நாம் அதையெல்லாம் தனித்தனியா பார்த்தாலும் பிறகு எல்லாவற்றையும் சேர்த்துப் புரிஞ்சுக்கணும். எலிசாவுக்கு முன்பே நடந்த ஒரு முக்கிய முயற்சியைப் பத்திப் பேசலாம்”. தலையசைத்தேன்.