

தாங்கள் செய்த சாதனைகளின் பட்டியலைத் துண்டுப் பிரசுரமாக வெளியிட்டு, வாக்கு சேகரிக்கும் அரசியல்வாதிகளைப் பார்த்திருப்போம். மதுரை மக்களவைத் தொகுதி உறுப்பினரும் எழுத்தாளருமான சு.வெங்கடேசன் ஒருபடி மேலே போய்விட்டார்.
கடந்த ஐந்து ஆண்டுகளில் அவர் செய்த பணிகள் குறித்த தகவல்களை ‘5 ஆண்டுகள் 150 வெற்றிகள்’ என்ற தலைப்பில் தொகுத்து ஒரு சிறு நூலாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வெளியிட்டுள்ளது. மக்களவையில் ஆங்கிலத்தில் கேட்கப்படும் கேள்விகளுக்கு அமைச்சர்கள் இந்தியில் பதில் அளிக்கும் நடைமுறையை எதிர்த்து, 2020இல் சென்னை உயர் நீதிமன்றத்தில் வெங்கடேசன் வழக்குத் தொடுத்தார்.
அந்த நடைமுறையானது ஆட்சிமொழிச் சட்டத்துக்கு எதிரானது என நீதிமன்றம் தீர்ப்பளித்தது. வெங்கடேசன், தொகுதி மேம்பாட்டுக்காகச் செய்த பணிகளோடு, இத்தகைய சட்டப் போராட்டங்களும்நூலில் சீரிய முறையில் தொகுக்கப்பட்டிருக்கின்றன; ‘மக்கள் ஊழியன்’ என்கிற பெயரில் அவரது பணிகள் பற்றிய ஆவணப்படமும் சமீபத்தில் வெளியிடப்பட்டிருக்கிறது.