

குழந்தைகளுக்காகவும், விண்வெளி அறிவியலில் ஆர்வம் கொண்ட ஆரம்பநிலை வாசகர்களுக்காகவும் இந்நூல் எழுதப்பட்டுள்ளது. “ஆகாயத்தைப் பார்... கேள்விகளைக் கேள்... அறிவியல் அங்கேதான் தொடங்குகிறது...” எனும் வாசகங்களுடன் தொடங்குகிறது இந்நூல்.
விமானத்தில் பறப்பவர்களும் வானத்தில்தான் பறக்கிறார்கள். அவர்களை நாம் விண்வெளி வீரர்கள் என்று சொல்கிறோமா? விமானம் வானில் ஏறும் போதும் பூமிக்கு இறங்கும் போதும் காது வலியால் துடிக்கிறோமே ஏன்? விண்வெளிக்குச் செல்ல ஏன் நாம் ராக்கெட்டை பயன்படுத்துகிறோம்? கிரகணம் என்றாலே பயப்படுகிறார்களே ஏன்? பூமியில் மட்டும் வளர்பிறை, தேய்பிறை ஏற்படுவது ஏன்? விண்கலங்கள் விண்ணில் ஏவுவதற்கு முன்பாக திருப்பதியில் வழிபாடு செய்வது சரியா? இதுபோன்ற கேள்விகளுக்கான விளக்கங்களை சிறுவர்கள் எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் இந்நூல் படைக்கப்பட்டுள்ளது.