

சினிமா, ஓவியம், இலக்கியம் போன்றவற்றில் தடம் பதித்து வருபவர் விட்டல்ராவ். சென்னை மூர் மார்க்கெட்டின் சார்சானிக் பாணியிலான பழைய கட்டிட வளாகத்தில் பழைய புத்தகங்களை அவர் தேடிக் கண்டெடுத்த அனுபவங்களை ஓர் அழகிய நூலாகவே எழுதிவிட்டார்.
அதிலுள்ள நிரந்தரக் கடைகளும் வராண்டா கடைகளும் இருகரம் கூப்பி வரவேற்றதோடு, ரசனைக்குத் தக்க வரவுகள் வந்தால் எடுத்துவைத்திருந்து தரும் அளவுக்கு கடைக்காரர்களுடன் இவர் நெருக்கமாகிவிட்டார்.