

மனிதர்களின் சிந்தனையை, சமூகத்தை வடிவமைக்கும் உன்னத கருவி கல்வி. உலகம் முழுவதும் கல்வியியல் சார்ந்து எண்ணற்ற ஆராய்ச்சிகளும், புரட்சிகரமான சிந்தனைகளும் தொடர்ந்து புத்தகங்களாக வெளிவந்தவண்ணம் உள்ளன.
ஜான் டூயி, பாவ்லோ ஃபிரெய்ரி, மரியா மாண்டிசோரி முதல் நவீனகால சிந்தனையாளர்கள் வரை கல்வி சார்ந்து எழுதிய பல நூல்கள் தமிழ் வாசகர்களை இதுவரை முழுமையாகச் சென்றடைந்ததில்லை.