அப்துல் கலாமின் அறியப்படாத அத்தியாயங்கள் | நம் வெளியீடு

அப்துல் கலாமின் அறியப்படாத அத்தியாயங்கள் | நம் வெளியீடு
Updated on
2 min read

இந்​திய வரலாற்​றில் அறி​வியல் தொழில்​நுட்ப வளர்ச்​சிக்​கும், தேசத்​தின் உயர்​நிலை இலக்​கு​களுக்​கும் தன் வாழ்​வையே அர்ப்​பணித்த மகத்​தான மனிதர் டாக்​டர் ஏ.பி.ஜெ. அப்​துல் கலாம். அந்த மாபெரும் ஆளு​மை​யின் நிழலாக, இருப​தாண்​டு​களுக்​கும் மேலாக (1993 - 2015) அவரோடு கூடவே பயணித்​தவர் அவருடைய தனிச்​செய​லா​ளர் ஆர்​.கே. பிர​சாத்.

கலா​முடன் தான் பணி​யாற்​றிய காலத்​தின் நினை​வு​களை மீட்​டுரு​வாக்​கம் செய்​து, ‘அப்​துல் கலாம் – சொல்​லப் ​ப​டாத கதைகள்’ என்ற நூலாக வடித்​திருக்​கிறார் பிர​சாத். கலாம் குடியரசுத் தலை​வ​ராகப் பதவி​யேற்ற ஒரு வாரத்​துக்​குப் பின், அவர் பங்​கேற்க வேண்​டிய நிகழ்ச்​சிகள் பற்​றிய திட்​ட​மிடல்​கள் தொடங்​கின. பிரதமர் எந்த நேரத்​தி​லும் வரக்​கூடும்; அயல்​நாட்டு விருந்​தினர்​கள் வரத் தொடங்​கி​யிருந்​தனர்.

பல்​வேறு மாநிலங்​களுக்கு அவர் போவதற்​கான திட்​ட​மிடல்​களும் தொடங்​கின. அவர் தான் போகப்​போகிற முதல் பயணத் திட்​டத்துக்​கான ஊர்​களின் பெயர்​களை அறி​வித்​தார். அவை, கோத்ரா மற்​றும் அஹம​தா​பாத்.

2002ஆம் ஆண்​டுக் கலவரங்​களில் இருந்து அவை இன்​ன​மும் முற்​றி​லு​மாக வெளியே வந்​திருக்​க​வில்​லை. “அர​சாங்​கம் அதை அனு​ம​திக்​காது!” என்று அவருடைய பணி​யாளர்​களுள் பலரும் கலாமிடம் எச்​சரிக்கை செய்​தனர்.

“நத்​திங் டூயிங்! நான் அந்த இடத்​துக்​குப் போயே தீரு​வேன்! பாதிக்​கப்​பட்ட மக்​களைப் பார்ப்​பேன்!” என்று கலாம் சொன்​னார். அதி​காரத்​துவ மட்​டங்​களில் குழப்​ப​மும், அமை​தி​யின்​மை​யும் ஏற்​பட்​டிருந்​தன.

Loading content, please wait...

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in