

திருச்சி எஸ்.ஆர்.வி. பள்ளிகள் சார்பில் ‘அறிஞர் போற்றுதும்’ என்ற பெயரில் ஆண்டுதோறும் சிறந்த தமிழ் அறிஞர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் 2026ஆம் ஆண்டுக்கான ‘எஸ்.ஆர்.வி. தமிழ் விருதுகள்’ அறிவிக்கப்பட்டுள்ளன. வாழ்நாள் சாதனையாளர்கள் விருதுக்கு எழுத்தாளர்கள் கி.விட்டல்ராவ், பாவண்ணன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
தமிழ் இலக்கிய விருதுக்கு கவிஞர்கள் க.மோகனரங்கன், இளம்பிறை, மொழிபெயர்ப்பாளர் ஆர்.சிவகுமார், சமூகநோக்கு விருதுக்கு மருத்துவர் சு.அனுரத்னா, படைப்பூக்கத் தமிழ் விருதுக்கு கவிஞர்கள் இசை, பொன்முகலி, எழுத்தாளர் அசதா மற்றும் சிறார் தமிழ் விருதுக்கு எழுத்தாளர் சாலை செல்வம் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். விருதுகள் வழங்கும் விழா செப்டம்பர் 5ஆம் தேதி (சனிக்கிழமை) நடைபெற உள்ளது.