ஞாலம் போற்றும் மதுரை அதிசயம் | நூல் வெளி

ஞாலம் போற்றும் மதுரை அதிசயம் | நூல் வெளி
Updated on
2 min read

சுந்​தரேசபுரி, மீனாட்சி நகரம், திருஆல​வாய் என்று பல பெயர்​களால் அழைக்​கப்​படும் மதுரை மாநகர் 1,800க்​கும் மேற்​பட்ட ஆண்​டு​கள் வரலாற்​றுச் சிறப்பு மிக்​கது. மதுரை​யில் வைகை ஆற்​றின் தென்​கரை​யில் மீனாட்சி சுந்​தரேஸ்​வரர் கோயில் அமைந்​துள்​ளது.

வண்​ணமய​மான கோபுரங்​கள், சிற்ப வேலைப்​பாடு​களு​டன் கூடிய தூண்​களைக் கொண்ட மண்​டபம், பக்​தர்​கள் புனித நீராடும் பொற்​றாமரைக் குளம் எனப் பல்​வேறு சிறப்பு அம்​சங்​களைக் கொண்ட மீனாட்சி - சுந்​தரேஸ்​வரர் கோயி​லில் செப்​.17ஆம் தேதி கும்​பாபிஷேகம் நடை​பெற உள்ள நிலை​யில், ‘தி இந்​து’ (The Hindu) குழு​மம், இக்​கோயி​லின் பெரு​மை​களைப் பறை​சாற்​றும் வகை​யில், ‘The Goddess’s Realm: The Madurai Meenakshi-Sundareswarar Temple’ என்ற ஆங்​கில நூலை வெளி​யிட்​டுள்​ளது.

‘மேட் ஆர்ட் பேப்​பர்’ (matt art paper) தாளில் நேர்த்​தி​யாக அச்​சிடப்​பட்ட 252 பக்​கங்களைக் கொண்ட இந்​நூல், 300க்​கும் மேற்​பட்ட கண்​கவர் புகைப்​படங்​களு​டன் வெளி​யாகி​யுள்​ளது. கோயில் வளாகத்​தின் தோற்​றம், வளர்ச்​சி, பிரமிக்க வைக்​கும் கட்​டிடக்​கலை, நேர்த்​தி​யான மண்​டபங்​களின் வரிசை, பல்​வேறு திரு​விழாக்​கள், இக்​கோ​யிலுடன் தொடர்​புடைய முனிவர்​கள், பாண்​டியர், சோழர், விஜயநகர, நாயக்க மன்​னர்​கள் உள்​ளிட்ட பல ஆட்​சி​யாளர்​கள் இக்​கோ​யிலைப் புகழ்​பெற்ற அமைப்​பாக மாற்ற ஆற்​றிய பங்​களிப்​பு​கள் எனப் பலதரப்​பட்ட தகவல்​களை இந்​நூல் உள்​ளடக்​கி​யுள்​ளது.

Loading content, please wait...

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in