

மானிட வரலாற்றின் மிகச் சிறந்த இயங்குசக்தி எது என்று கேட்டால், யோசனையின்றி ‘அறிவியல்’ என்று சொல்லிவிடலாம். இன்று நாம் அனுபவிக்கும் அத்தனை வசதிகளும், நோய்களிலிருந்து விடுபட்டு வாழும் பாதுகாப்பான வாழ்க்கையும், பிரபஞ்சத்தை அளக்க முனையும் நமது பரந்த அறிவும் ஒரே இரவில் சாத்தியமானவை அல்ல.
அவை ஒவ்வொன்றுக்குப் பின்னாலும் ஆயிரக்கணக்கான மனிதர்களின் அர்ப்பணிப்பும், வாழ்நாள் உழைப்பும் மறைந்துள்ளன.
இன்று நாம் இயல்பாக ஏற்றுக்கொள்ளும் ஒவ்வொரு அறிவியல் உண்மையும், ஏதோ ஒரு காலத்தில் பழமைவாதம், மதக் கோட்பாடுகள், அதிகார மமதை மற்றும் சக விஞ்ஞானிகளின் அறியாமை ஆகியவற்றை எதிர்த்து நின்று பெற்ற வெற்றியாகும்.
பூமி சூரியனைச் சுற்றுகிறது என்று சொன்னதற்காக ஆயுள் முழுவதும் வீட்டுக்காவலில் அடைக்கப்பட்ட கலிலியோ, பிரபஞ்சம் முடிவற்றது என்று பிரகடனப்படுத்தியதற்காக நாவறுக்கப்பட்டு உயிருடன் கொளுத்தப்பட்ட ஜியோர்டானோ புருனோ, பிரசவத்தின்போது மருத்துவர்கள் கை கழுவ வேண்டும் என்று கூறி நோய்த்தொற்றைத் தடுக்க முயன்றதற்காக மனநலக் காப்பகத்தில் அடைக்கப்பட்டு உயிர் துறந்த இக்னாஸ் செம்மல்வைஸ், மனித குலத்தின் கணினி அறிவியலுக்கு அடித்தளமிட்டும்