

இசைத்தமிழை வளர்த்தெடுக்கவும் பழந்தமிழ் இசை மரபைப் பேணிக் காக்கவும் அரும்பாடுபட்டவர் ஆபிரகாம் பண்டிதர். அவரின் தொண்டரான ப.தண்டபாணி இயற்றிய கீர்த்தனைகளின் தொகுப்பே ‘தமிழ்க் கீர்த்தனைகள் (தொகுதி 3)’.
இதன் முதல் தொகுதி 2001ஆம் ஆண்டும் இரண்டாவது தொகுதி 2024ஆம் ஆண்டும் வெளியாயின. ப.தண்டபாணி உருவாக்கிய ‘ஆபிரகாம் பண்டிதர் மன்றம்’ இந்த நூலை வெளியிட்டிருக்கிறது. பதிப்பாசிரியரான நாஞ்சில் நடராசன் மிகவும் கவனமாகவும் நுட்பமாகவும் இந்த நூலைப் பதிப்பித்தமை புலப்படுகிறது.
19ஆம் நூற்றாண்டில் பல்வேறு கீர்த்தனைகள் தோன்றின. வள்ளலார், வேதநாயகம் பிள்ளை ஆகியோர் பல கீர்த்தனைகள் பாடினர்.கோபாலகிருஷ்ண பாரதியார் ‘நந்தனார் சரித்திரக் கீர்த்தனைகள்’ பாடினார்.