எளிமையும் தர்க்க வலிமையும்

எளிமையும் தர்க்க வலிமையும்
Updated on
1 min read

மக்​கள் தொண்டே மகேசனுக்​கான தொண்டு என்​கிற கொள்​கையோடு வாழ்ந்​தவர் சுவாமி சகஜானந்​தர். பட்​டியல் சாதி​யைச் சேர்ந்த அவர் சிதம்​பரத்​தில் நந்​த​னார் பெயரில் நடத்​திய ஆசிரமம் பல சமூகச் சீர்​திருத்​தப் பணி​களுக்​காக அறியப்​பட்​டது.

ஆங்​கிலேயர் ஆட்​சி​யிலும் நாடு விடு​தலை அடைந்த பிறகும் சென்னை மாகாணச் சட்​டப் பேர​வை​யில் ஏறக்​குறைய 30 ஆண்​டு​களாக அவர் உறுப்​பின​ராக இருந்​தார். சகஜானந்​தர் சட்​டப்​பேர​வை​யில் பல்​வேறு கோரிக்​கைகளை முன்​வைத்து ஆற்​றிய உரைகளின் தொகுப்பே இந்​நூல்.

ம.வெங்​கடேசன் இவற்​றைத் தொகுத்​துள்​ளார். சகஜானந்​தரின் சிந்​தனை​கள், சமூகப் பிரச்​சினை​களை அவர் அணுகிய விதம், காந்​தி​யடிகள் உள்​ளிட்ட சம கால ஆளு​மை​கள் குறித்த அவரது கருத்​துகள் போன்​றவற்றை இந்த உரைகள் மூலம் அறிந்​து​கொள்ள முடிகிறது.

Loading content, please wait...

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in