

யதார்த்தவாதம், சமூக அக்கறை, கலாபூர்வமான திரைப்பட ஆக்கம் ஆகியவற்றின் மூலம் இந்திய திரைப்பட உலகத்துக்குப் புது ரத்தம் பாய்ச்சிய வங்க மூவர் அணி சத்யஜித் ராய், மிருணாள் சென், ரித்விக் கட்டக்.
இவர்கள் மூவரில் மிகக் குறைந்த காலமே வாழ்ந்து, மிகக் குறைந்த திரைப்படங்களை மட்டுமே இயக்கியிருந்தாலும் தனி முத்திரை பதித்தவர் ரித்விக் கட்டக். இடதுசாரிக் கொள்கையின் மீது தீவிரப் பிடிப்புடன் இருந்த அவர், தன் படைப்புகள் மூலம் அது சார்ந்த புரிதலை பரவலாக்க முயன்ற அதேநேரம், கலைத்தன்மையில் சமரசம் தேவையில்லை என்கிற புரிதலைக் கொண்டவர்.