பாற்கடல் அமுதம் | நம் வெளியீடு

பாற்கடல் அமுதம் | நம் வெளியீடு
Updated on
2 min read

நினை​வு​கள் என்​பவை வெறும் கடந்த காலத்​தின் எச்​சங்​கள் அல்ல; அவை நிகழ்​காலத்​துக்​குச் சுவை சேர்க்​கும் உப்​பு. கடந்த காலத்தை அசை​போ​டாத மனிதர் யாரு​மில்​லை.

ஆனால், அந்த நினை​வு​களை மொழி​யில் வடித்​து, காலத்​தின் சாட்​சி​யங்​களாக மாற்​று​பவர்​கள் ஒரு சிலரே. கலாப்​ரியா அந்த அரிய பரம்​பரையைச் சேர்ந்​தவர்.

எப்​போதோ நடந்த ஒரு சிறு நிகழ்​வை, ஒரு வாசனையை, ஒரு குரலை, ஒரு பார்​வையை மனதின் மூலை​யி​லிருந்து தோண்​டி​யெடுத்​து, அதைச் சுற்​றித் தகவல்​களை​யும் சித்​திரங்​களை​யும் பின்​னி, வாசகரின் முன் உயிர்ப்​பித்து வைக்​கும் அவரது எழுத்து பிரமிப்​பூட்​டு​கிறது!

நடுக்​கடலில் வழிதவறிய கப்​பலில் குடிநீர் தீர்ந்​து​விடு​கிறது.

சுற்​றி​லும் நீர். ஆனால், ஒரு துளி​யும் பருக முடி​யாது. உயிர் ஊசலாடும் தருணத்​தில் இன்​னொரு கப்​பல் கடந்து செல்​கிறது. குடிநீர் கேட்​கிறார்​கள். அந்​தக் கப்​பலில் உள்​ளவர்​கள் சிரித்​த​படி சொல்​கிறார்​கள்​... ‘வாளி​யால் கடல்​நீரையே அள்​ளிக் குடி​யுங்​கள்.

இது அமே​சான் நதி கடலில் கலக்​கும் இடம், நல்ல நீராகவே இருக்​கும்!’ ஆதி​காலத்​தில் இறப்பு என்​பதே இல்​லை. வயதாக வயதாக மனிதர்​கள் சுருங்​கி, இறு​தி​யில் அகல்​விளக்கு வைக்​கும் மாடக்​குழி​யில் ஏறி அமர்ந்​து​விடு​வார்​களாம். யாரும் இறக்​காத​தால் பூமி​யின் பாரம் தாங்க முடி​யாமல், பூமாதேவி சிவனிடம் முறை​யிடு​கிறார்.

Loading content, please wait...

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in