

மகிழ்ஆதனின் 3வது கவிதைத் தொகுப்பு இது. மலையிலிருந்து பறக்கும் பறவைகளாய் தனது கவிதைகள் பறப்பதாக, குறிப்பிடும் மகிழ்ஆதனுக்கு 15 வயது பூர்த்தியாக வில்லை.
தாயின் நேசத்தில் மலையிலிருந்து பறவையாய் பறப்பதும், சிறுகுழந்தையான தம்பியின் சிரிப்புக் காரணமாக மனதில் மணம் வீசுவதும், மணக்கும்போது சிரிக்கும் பூவை காண்பதும், மகிழ்ஆதனின் கவிதைகள், வீட்டிலிருந்தே தொடங்குவதை தெரிவிக்கின்றன.