காலத்தின் சக்கரங்களில் பயணிக்கும் கதைகள் | நூல் வெளி

காலத்தின் சக்கரங்களில் பயணிக்கும் கதைகள் | நூல் வெளி
Updated on
1 min read

பார​திக்​கு​மாரின் ‘ஒரு துண்டு ரயில்’ என்ற இத்​தொகுப்​பில் உள்ள கதைகள் பெரும்​பாலும் இரண்டு வகைப்​படு​கின்​றன. முதலா​வது, பழைய விஷ​யங்​களை, சரித்​திரக் குறிப்​பு​களை அல்​லது பழைய அபூர்​வ​மான தருணங்​களை மைய​மாக வைத்து அதன் சூழலை​யும் வாழ்​வியல் மதிப்​பை​யும் கதைகளாக மாற்​று​வது.

இரண்​டாவது, நிகழ்​கால வாழ்​வில் உள்ள அம்​சங்​களை விவரிப்​பது. இத்​தொகுப்​பில் முதல் வகைக் கதைகளே நிறைய உள்​ளன. அவை பெரிய பரிசுகள் பெறத் தகு​தி​யானவை. சரித்​திரக் குறிப்​பு​கள் சார்ந்த கதைகளை எழுதும்​போது, அந்​தக் கால​கட்​டத்​தின் மொழியை​யும் சூழலை​யும் கொண்டு வர அவர் எடுத்​துக்​கொண்ட உழைப்பு தனித்​துத் தெரி​கிறது.

மொழியை அப்​போதைய சூழலுக்​குத் தகுந்​த​படி கையாள்​கிறார். இன்​றைய வாழ்​நிலை சூழ்​நிலை​யில் எதிர்​கொள்​ளும் தீவிர​மான அனுபவங்​களை சொல்​வதற்​கும், இந்​தக் களத்​துக்​கான அவரது மொழி சரி​யாகப் பொருந்​திப் போகிறது.

Loading content, please wait...

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in