

எண்பதுகளில் காவல்துறையில் துணைக் கண்காணிப்பாளராகவும், பின்னர் பல்வேறு உயர் பதவிகளையும் வகித்தவர் துக்கையாண்டி ஐபிஎஸ். தான் கடந்து வந்த காவல்துறை அனுபவங்களை ஏற்கெனவே ‘ஊர்க்காவலன்’ என்ற பெயரில் நூலாக வெளியிட்டுள்ளார். அதன் தொடர்ச்சியை எழுதி 2ஆம் பாகமாக தற்போது வெளியிட்டுள்ளார்.
காவல்துறைப் பணி, சட்டத்தின் கடமையைச் செய்வது என்று கூறப்படும் அதேவேளையில், அது மக்களுக்கான சேவை என்பதை நன்கு உணர்ந்து செயல்பட்ட சம்பவங்களை அவர் நினைவு கூரும் விதம் பாராட்டத்தக்கனவாக உள்ளன.