வகுப்பறையில் திறக்கும் அகக்கண்கள்

வகுப்பறையில் திறக்கும் அகக்கண்கள்
Updated on
1 min read

நியூசிலாந்து பழங்​குடிகளான மாவோரி இனச் சிறார்​களின் கல்விக்​காக சில்​வியா ஆஸ்​டன் வார்​னர் சுமார் 24 ஆண்​டு​கள் பணி செய்​தார். தன்​னுடைய பணிக் கால அனுபவங்​களைத் திரட்டி உண்மை தரவு​களின் அடிப்​படை​யில் ‘ஓர் ஆசிரியர்’ என்ற புத்​தகத்​தை​யும் எழு​தி​யுள்​ளார். கல்​வி​யாளர் ராஜேந்​திரன் இந்​நூலை தமிழில் மொழிபெயர்த்​துள்​ளார்.

“வாழ்​வது எப்​படி என கற்​றுக் கொள்​வதுதான் அறிவு பெறு​வதை விட முக்​கிய​மானது” என்​கிறார் சில்​வி​யா. அவர் செயல்​படுத்​திய இயல்​பான கற்​பித்​தல் அணுகு​முறை குழந்​தைகளின் மனப்பாங்​கினை போரிலிருந்து அமை​திக்கு திருப்​புவதற்​கான முக்​கிய அடிப்​படை​யாக அமைந்​தது.

ஆசிரியரின் கடமை என்​பது குழந்​தைகளின் உள் ஆற்​றலை இயல்​பாக வெளிப்​படுத்​து​வதற்​கான வழி​முறை​களை அடை​யாளம் கண்டு நடை​முறைப்​படுத்​து​வது ஆகும் என்​கிறார் ஆசிரியர்.

Loading content, please wait...

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in