ஆண்-கவி மனதின் ஆழ்ந்த பெருமூச்சு

ஆண்-கவி மனதின் ஆழ்ந்த பெருமூச்சு
Updated on
1 min read

நவீன கவி வடிவ​மோ, உரைநடைக் கவிதைகளின் வடிவமோ அல்ல; திரைச்​சீலை நீண்​டு அகன்று தொங்​கு​வது போல, அடிதோறும் ஆறேழு சொற்​களு​டன் நீள் வரி​களில் எழுதப்​பட்​டுள்​ள 108 கவிதைகளின் தொகுப்பு இது. இது ஒரு புது முயற்​சி.

‘நாச்​சி​யார் திரு​மொழி’​யில் சிற்​றில் சிதைக்க வேண்​டா​மென கண்​ணனை வேண்​டிப் பாடும் ஆண்​டாள் பாடல்​களின் ஓசைந​யம் நீண்ட லயத்​தோடு இசைந்து வரு​வதை நெடு​கிலும் கேட்க முடி​யும்.

அது ஆண்​டாள் கவிதைகள் என்​றால், இத்​தொகுப்​பின் கவிதைகள் நவீன ஆண்​-கவி மனதின் ஆழ்ந்த பெரு​மூச்​சு. அரற்​றிக்​கொண்​டே​யிருக்​கும் ஆழ்​மன​தின் பெரு​வெள்​ள​மாக, ஏராள​மான சொற்​சேர்க்​கைகள், சொற்​செட்​டு​கள், படிமங்​களின் தூசிப் படலங்​களாக பாய்ந்​தோடிக் கொண்​டே​யிருக்​கின்​றன.

Loading content, please wait...

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in