காட்​சிக் கவிதைகளின் குவியல்

காட்​சிக் கவிதைகளின் குவியல்
Updated on
1 min read

காட்​சிப்​படுத்​தல் என்​பது கவிதை​யின் ஓர் உன்னத உத்​தி​முறை. ஆனால் ஒரு கவிதை​யின் சிறப்பு அவ்​வுத்​தியை மட்​டும் சார்ந்​ததன்​று. மாறாகக் காட்​சிப்​படுத்​தும் பொருண்​மை​யை​யும் சார்ந்​த​தாகும்.

படத்​தொகுப்​பாள​ரான பா. சந்​துரு​வின் ‘மழை நின்ற மறு​நாள்’ தொகுப்பை உன்​னதப் பொருண்​மை​கள் கொண்ட காட்​சிக் கவிதைகளின்குவியல் எனலாம். பெரும்​பான்​மை​யான கவிதைகள் சமூகப் பிரஞ்​ஞையோடு எழுதப்​பட்​டுள்​ளன.

அவை சமூகத்​தின் உடைசல்​கள்; கீறல்​களைக் கைக்​காட்டி நிற்​கின்​றன. பாலஸ்​தீன போர், வேங்​கைவயல், நாங்​குநேரி, குடி​யுரிமைத் திருத்​தச் சட்​டம் உள்​ளிட்ட பல்​வேறு பிரச்​சினை​களைப் பற்​றிய கவிதைகள் சமூகத்​தின், அதி​காரத்​தின் சட்​டையைப் பிடித்​துக் கேட்​கின்​றன.

Loading content, please wait...

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in