அறம் பிறழ்ந்த நிலம் | நூல் வெளி

அறம் பிறழ்ந்த நிலம் | நூல் வெளி
Updated on
2 min read

தனிமனித நினை​வு​களே மானுட வரலாற்​றின் சேகரம். நினை​வு​கள் மூலமே மனித​வாழ்வு நிறை​கிறது. நினை​வென்​பது நிலம் சார்ந்​தது. நிலமென்​ப​தில் சகல​மும் அடங்​கி​யிருக்​கிறது. நிலம், தன்​மீது நிகழும் மனிதகுல வாழ்​வின் சாட்​சி​யாக நிற்​கிறது. ஒரே நிலம், காலத்​தின் முடிவற்ற ஓட்​டத்​தில் புனித​மாக இருந்து அபுனித​மாவதைக் காண்​கிறது.

தெய்​வம் முளைத்​தெழுந்த நிலத்​தில் சாத்​தான்​களின் பிறப்​பும் நிகழ்​கிறது. பசி தீர்த்த நிலத்​தில், மனித உயிரைக் குடிக்​கும் கீழ்​மை​யைக் காணலாம். தன்​னுடைய அடை​யாளத்​துக்கு எதிர்​நிலை அடை​யாளத்​தைக் காணும் துர்​பாக்​கி​யம் மணிபல்​ல​வத்துக்கு நிகழ்ந்​திருக்​கிறது.

மணிமேகலை காப்​பி​யத்​தில், மணிமேகலா தெய்​வம் மணிமேகலை​யைத் தூக்​கிச் சென்று விடு​கின்ற இடமே மணி பல்​ல​வம் எனும் நயி​னாத் தீவு.

மணிபல்​ல​வத் தீவில் இருந்த பௌத்த விகாரம், புனித​மான போதி​மரம், அதன் அரு​கில் இருந்த பௌத்த சேதி​யம் (புத்​தரின் பாத பீடிகை) இருந்​ததை மணிமேகலை சொல்​கிறது.

அங்​கிருந்த கோமுகி பொய்​கையை வணங்​கிய பிறகே ஆபுத்​திரன் கையில் இருந்த அமுதசுரபி மணிமேகலை​யின் கைக்கு வரு​கிறது. மானுட குலத்​தின் பசிப்​பிணி​யைப் போக்க மணிபல்​ல​வத்​தில் இருந்து புறப்​படு​கிறாள் மணிமேகலை. மணிமேகலை காப்​பி​யத்​தின் திருப்​பு​முனை சம்​பவம் நடந்த இடம் மணிபல்​ல​வம்.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in