

வேலன், வேலாயுதன், கந்தன், கடம்பன், முத்துக்குமரன் என்று அழைக்கப்படும் முருகப் பெருமானின் சிறப்புகள் பற்றி ‘குன்றுதோறும் குமரன்’ என்ற இந்நூல் பேசுகிறது.
முருக வழிபாட்டின் சிறப்பு அம்சங்கள், முருகப் பெருமானின் பெருமைகள், அவரது திருத்தலங்கள், திருக்கோலங்கள், அடியார்கள், திருவிழாக்கள், அவருக்காக பக்தர்கள் செலுத்தும் நேர்த்திக் கடன், அவருக்கு உகந்த மலர்கள், அவரை வணங்க வேண்டிய நாட்கள், அவருக்காக கடைபிடிக்கப்படும் விரதங்கள், அவரது புகழைப் பாடும் நூல்கள், அவருக்காக இயற்றப்பட்ட சுலோகங்கள், அவருக்கான வழிபாட்டு முறைகள், காவடி எடுத்தல், அலகு குத்துதல், பால் குடம் எடுத்தல், முடி இறக்குதல், பாத யாத்திரை உள்ளிட்ட ஏராளமான தகவல்கள் இந்நூலில் இடம் பெற்றுள்ளன.