

வைக்கம் சத்தியாக்கிரகம் பலருக்கு அறிமுகமாகியுள்ளது. அதே காலக்கட்டத்தில் கோவிலை மையமாகக் கொண்ட சமூகப் பாகுபாடுகள் குருவாயூர், கல்பாத்தி, சுசீந்திரம் ஆகிய ஊர்களிலும் இருந்தது போதுமான கவனம் பெறவில்லை.
வைக்கம் முதல் சுசீந்திரம் வரைக்கும் கோவில் வீதிகளில் குறிப்பிட்ட பிரிவினர் நடப்பதற்கு இருந்த தடையையும் அதை அகற்றுவதற்காக நடத்தப்பட்ட போராட்டங்களையும் இந்த நூல் ஆவணப்படுத்துகிறது.
உதாரணமாக, கன்னியாகுமரி மாவட்டம் கற்காடு என்கிற ஊரைச் சேர்ந்த பட்டியல் சாதியினர், சுசீந்திரம் தாணுமாலயன் கோவிலை ஒட்டியுள்ள சாலையைப் பயன்படுத்த மறுக்கப்பட்ட வரலாறு தமிழ்ச்சமூகம் அறிந்துகொள்ள வேண்டிய ஒன்று.