

யதார்த்த கதைகளின் சிறப்பம்சம் என்னவெனில், வாசிப்பவர் தன் அனுபவங்களோடு எளிதாகப் பொருத்திக்கொள்வதுதான். அதிலும், வட்டாரக் கதைகளில் பால்ய காலம், பழகிய மனிதர்கள், காதல் நினைவுகள், மண் வாசம், மொழி என எல்லாமும் வாசகர் மனங்களில் நிழலாடும்.
மாற்றுக் கதையாடல்களை, அறிவியல் புனைவுகளை விட யதார்த்த வாழ்வை, மனிதர்களை உயிர்ப்போடு சொன்ன கதைகளே பெரும்பான்மை மக்களால் கொண்டாடப்படுகின்றன.
தமிழின் முன்னிலை எழுத்தாளர்கள் குறிப்பிடும் ‘சிறந்த 100 சிறுகதைகள்’ பட்டியல்களே இதற்குச் சான்று. அந்த வகையில், கரிசல் மண்ணின் மக்களை, வாழ்வியலை, பாடுகளை, மொழியை எந்தவிதப் போலித்தனமும் அற்ற இலக்கியமாகப் பதிவு செய்த எழுத்தாளர்களில் ஒருவர் கா.சி. தமிழ்க்குமரன்.