அலெக்ஸாண்டர் புஷ்கினுக்கு ஓர் அஞ்சலி! | நூல் நயம்

அலெக்ஸாண்டர் புஷ்கினுக்கு ஓர் அஞ்சலி! | நூல் நயம்
Updated on
1 min read

ஒரு சாகச நாயக​னின் வசீகரத்​தோடு வாழ்ந்த ரஷ்ய முன்​னோடி எழுத்​தாளர் அலெக்​ஸாண்​டர் புஷ்கின். கேப்​டன் மகள், ஸ்பேடு​களின் ராணி போன்ற நாவல்​கள், வெண்​கலக் குதிரைவீரன் உள்​ளிட்ட கவிதைகள் போன்ற அவரின் படைப்​பு​கள் புகழ்​பெற்​றவை.

புஷ்கின் மீது அளவற்ற பிரி​யம் கொண்ட ஒரு​வர், புஷ்கினின் பாணி​யிலேயே புஷ்கினைப் பற்​றியே எழு​தி​யிருக்​கும் குறு​நாவல்​தான், ‘கறுப்பு ஆறு’ (புஷ்கின் கோப்​பு​கள்). இது​வரை மொழிபெயர்ப்​பைத் தனது அடை​யாள​மாகக் கொண்​டுள்ள கே. கணேஷ்​ராம் எழு​தி​யுள்ள முதல் புனை​வான இது, புஷ்கின் எழு​திய ‘பெல்​கின் கதைகள்’ என்​கிற சிறுகதைத் தொகுப்பை நினை​வூட்​டு​கிறது; கதைக்​குள் கதை என்​கிற புஷ்கினின் உத்​தி​யைக் கொண்​டுள்​ளது.

Loading content, please wait...

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in