

உலகின் முதல் அறிவியல் துறை இயற்கை அறிவியல் துறைதான். இன்றைக்கு உயிரியல் துறை என்பது மருத்துவப் படிப்புக்கான திறவுகோலாக மட்டுமே கருதப்படுகிறது.
மாறாக, உலகில் உள்ள இயற்கை அம்சங்களான தாவரங்கள், உயிரினங்கள், ஒட்டுமொத்த இயற்கைச் சூழலியல் குறித்த ஆய்வுகள் நம் நாட்டில் போதிய முக்கியத்துவத்தைப் பெறுவதில்லை.
இயற்கையில் இருந்து பல சேவைகளை நாம் இலவசமாகப் பெற்றுக்கொண்டிருக்கிறோம். பல தாவரங்களில் இருந்து மருந்துகள் கிடைத்துக் கொண்டிருக்கின்றன. பல உயிரினங்கள் காடுகளை உருவாக்கியும் பாதுகாத்தும் கொண்டிருக்கின்றன.