​வால்​பாறை​யின் வரலாறு | நூல் நயம்

​வால்​பாறை​யின் வரலாறு | நூல் நயம்
Updated on
1 min read

இன்று ஊட்​டி, கொடைக்​கானல் போன்று வால்​பாறையும் முக்​கிய​மான சுற்​றுலாத் தலமாகி​விட்​டது. அதனால் இந்த அழகிய மேற்​குத் தொடர்ச்சி மலை​யில் மனிதர்​களின் நடமாட்​டம் அதி​கரித்​து​விட்​டது.

சுற்​றுலா​வுக்​குச் செல்​லும்​போது கிடைக்​கும் அதே மகிழ்ச்​சியை அங்​கேயே வாழ்​பவர்​களுக்கு வால்​பாறை வழங்​கு​வது இல்​லை.

வால்​பாறை​யில் வசிக்​கும் வன விலங்​கு​கள், பறவை​கள், பூச்​சிகள், தாவரங்​கள், தேயிலைத் தோட்​டங்​கள், அணை​கள், கோயில்​கள், கல்விக்​கூடங்​கள், மருத்​து​வ​மனை​கள், தேயிலைத் தொழிற்​சாலைகள், அங்கு வசிக்​கும் மக்​கள், தேயிலைத் தோட்​டத் தொழிலா​ளர்​கள், சுற்​றுச்​சூழல், பெண்​களின் நிலை என அனைத்​தை​யும் ஆவணப்​படுத்​தி​யிருக்​கிறது இந்த நூல்.

வால்​பாறை​யில் இருப்​பவர்​களில் பெரும்​பாலானோர் ஒரு காலத்​தில் இலங்​கையி​லிருந்து வந்த தமிழர்​கள். அவர்​களின் மொழி, உணவு முறை, பண்​பாடு, வாழ்​வியல் போன்​றவற்​றை​யும் அறிந்​து​கொள்ள முடிகிறது.

தேயிலைத் தோட்​டத் தொழிலா​ளர்​களின் நிலை சில பத்​தாண்​டு​களுக்கு முன்பு இருந்​த​திலிருந்து இன்று ஓரளவு முன்​னேற்​றத்தை எட்​டி​யிருக்​கிறது.

என்​றாலும் இன்​றும் அந்த மக்​களின் துயர் தீர்ந்​து​விட்​ட​தாகச் சொல்ல முடி​யாது என்​ப​தை​யும் இந்த நூல் பதிவு செய்​திருக்​கிறது. ஏராள​மான ஒளிப்​படங்​களு​டன் இருப்​பது கூடு​தல் சிறப்​பு.

வால்​பாறை

ஜே.ஆர்.லட்​சுமி

கெவின் கார்கி பப்​ளி​கேஷன்​ஸ்

விலை: ரூ.300

தொடர்​புக்​கு: 9840606462

​வால்​பாறை​யின் வரலாறு | நூல் நயம்
தாக்கம் ஏற்படுத்தும் சிற்றிதழ்
Loading content, please wait...

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in