

வங்கி நிர்வாகங்களின் தொழிலாளர் விரோதப் போக்கினை எதிர்த்து அகில இந்திய வங்கி ஊழியர் சங்கம் 1946இல் பிரபாத்கரால் தோற்றுவிக்கப்பட்டது. அவரைத் தொடர்ந்து எச்.எல். பர்வானா, சுரேஷ் பால் போன்ற முன்னோடிகளின் வழித்தோன்றலாக இடம் பெறுபவர் தாரகேஷ்வர் சக்கரவர்த்தி.
கிழக்கு பாகிஸ்தானில் (இன்றைய வங்க தேசம்) லட்சுமிபூர் என்கிற சிறு நகரத்தில் 1926ஆம் ஆண்டு பிறந்தார் தாரகேஷ்வர். டாடாவின் நிர்வாகத்தில் இருந்த சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியாவில் 1945ஆம் ஆண்டு சேர்ந்தார்.
தனது 77ஆம் வயதில் 2003இல் இறக்கும் வரை தொழிற்சங்கப் பணிகளை மேற்கொண்டார். வங்கி நிர்வாகத்துடன் திறமையாகப் போராடி, தொழிலாளர் வாழ்வில் திருப்புமுனையாக அமைந்த இரு தரப்பு ஒப்பந்தங்களை வெற்றிகரமாக நிறைவேற்றினார்.