

ஈரம் கசியும் நிலத்தைப் போல நெகிழ்வும் தன்மையும் நிறைந்தவை சு.தமிழ்ச்செல்வியின் படைப்புகள். கடுகைப் பிளந்து ஏழு கடலைப் புகுத்தியதுபோல், ‘அகத்தில் அசையும் நதி’ எனும் இந்நூலில் இடம்பெற்றுள்ள ஒவ்வொரு கட்டுரையும் ரத்தினச் சுருக்கம்.
கதை நிகழும் களத்துக்கு நம்மைக் கையோடு அழைத்துச் சென்று விவரிப்பது தமிழ்ச்செல்வியின் பலம். இந்தத் தொகுப்பில் இடம்பெற்றுள்ள எல்லாருமே எளிய மனிதர்கள். மூன்று வேளை உணவுக்கே அல்லாடுகிறவர்களாக இருந்தாலும் கம்பீரம் குலையாதவர்கள்.
அறம் பிறழ்ந்த சமூகத்தின் இந்தக் கோரமுகத்தைத் தன் சொற்களின்வழி கேள்விக்குள்ளாக்குகிறார் தமிழ்ச்செல்வி. தன் பணி அனுபவங்களை விவரிக்கும் இவர், எல்லா இடங்களிலும் ஏழைகளின் பக்கமே நிற்கிறார். மரபார்ந்த வழக்கங்களைச் சொல்லும் அதேநேரம் நாம் முன்னேற வேண்டிய பாதையையும் இந்தத் தொகுப்பின்வழி துலக்கப்படுத்துகிறார் தமிழ்ச்செல்வி. வாசிக்கிறவர்களின் மனங்களில் இந்நூல் நிச்சயம் ஒரு திறப்பை உண்டாக்கும் என்பதில் சந்தேகமே இல்லை.
அகத்தில் அசையும் நதி
சு.தமிழ்ச்செல்வி
இந்து தமிழ் திசை வெளியீடு
விலை: ரூ.180
ஆன்லைனில் பெற : https://store.hindutamil.in/publications
தொடர்புக்கு: 7401296562