

உலக வரலாற்றில் மிக நீண்ட காலப் பிரச்சினையாகவும் மிகச் சிக்கலான பிரச்சினையாகவும் நீடித்துக்கொண்டிருக்கிறது இஸ்ரேல்-பாலஸ்தீனப் பிரச்சினை.
19ஆம் நூற்றாண்டில் யூதப் பத்திரிகையாளர் தியோடர் ஹெர்ஷெல், பாலஸ்தீனம் யூதர்களின் தாயகம் என்கிற கருத்தாக்கத்தைக் கொண்டுவந்தார். இது ‘சியோனிசம்’ என்று அழைக்கப்படுகிறது.
இந்தக் கருத்தாக்கம் ஐரோப்பாவில் வசித்த யூதர்கள் பாகுபாட்டை எதிர்கொள்ளவும் இன அழிப்பைச் சந்திக்கவும் வழிவகுத்தது.
முதல் உலகப் போரில் யூதர்களின் ஆதரவைப் பெறும் நோக்கில், ‘பாலஸ்தீனர்களுக்குத் தனி நாடு’ என்கிற பால்ஃபோர் பிரகடனத்தை அறிவித்தது பிரிட்டன். முதல் உலகப் போரின் முடிவில் ஒட்டோமான் ஆட்சி வீழ்ந்தது.