

இராம.கோபாலன் இளம் வயதிலேயே தேசப்பற்று கொண்டு பின்னர் ஆர்.எஸ்.எஸ்ஸில் சேர்ந்து சமுதாயத் தொண்டில் ஈடுபட்டார். ‘இந்து முன்னணி’ என்ற அமைப்பை நிறுவி சமுதாயத்துக்காக பாடுபட்டார்.
வேத கோஷம் எங்கும் முழங்க பாடுபட்ட இவர், அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்கு உழைத்தார். மதமாற்றுச் சக்திகளுக்கு எதிராக அயராது போராடினார். இவரது எழுத்துகள் தேசப்பற்று மட்டுமல்லாமல் தேச நலனையும் சார்ந்து இருக்கும்.
அனைத்து மக்களிடையே சமுதாய உணர்வையும் ஒற்றுமையையும் எடுத்துரைப்பதாக இவரது அறிவுரைகள் அமைந்திருக்கும். தியாகம், சகிப்புத்தன்மை, சனாதன தர்மத்தின் மீதான அசைக்க முடியாத நம்பிக்கை ஆகியவற்றின் சங்கமமாக இவரது வாழ்க்கை அமைந்துள்ளது.