

புதுக்கவிதைகள் புதுவேகத்துடன் பாய்ந்துவந்த காலம் ஒன்றிருந்தது. ‘வானம்பாடி’ புதுக்கவிதைகள் ஒருபுறமும் ‘எழுத்து’, ‘கசடதபற’ புதுக்கவிதைகள் இன்னொரு புறமுமாக நடைபோட்டன.
மரபுக்கவிதைகள் மங்கத் தொடங்கியபோது, ‘உரைவீச்சுகளும்’ மேலோங்கத் தொடங்கியது. யாப்பிலக்கணம் இன்றி, கருத்துகளை நறுக்குத் தெறித்தாற்போன்று எழுதுவதற்கான வடிவம் அது.
இந்நூலாசிரியர், அந்த உரைவீச்சுகளில் சமூகச் சிந்தனைகள், மனிதநேயம், மதநல்லிணக்கம் எனப் பல பொருண்மைகளில் எழுதியுள்ளார். பொதுவாழ்வில், உன்னத நெறிநின்ற காந்தி, வ.உ.சி., பெரியார், பாரதி ஆகியோரைப் பற்றியெல்லாம் எழுச்சிமிக்க பாக்கள் இதில் உள்ளன.