சம​கால சமூக வாசிப்பு | நூல் வெளி

சம​கால சமூக வாசிப்பு | நூல் வெளி
Updated on
2 min read

சங்க இலக்​கி​யங்​கள் சமூக வாழ்​வின் சாட்​சி​யங்​கள் என்​பது உறுதி செய்​யப்​பட்​டுள்​ளது. இயற்​கை​யும் மனிதனும் இசை​வாய் வாழ்ந்த​தன் அடை​யாளம் சங்க இலக்​கியப் பனுவல்​கள். தமிழ்க் கல்வி எல்​லைகளைத் தாண்​டிய பிற துறை அறிவு வெளிச்​சம் சங்க இலக்​கிய ஆய்​வு​களை மேம்​படுத்​தின எனலாம்.

அவ்​வகை​யில் அடிப்​படை​யில் இயற்​பியல் பேராசிரிய​ரான சு. இராமசுப்​பிரமணி​யன் எழு​திய ‘சங்க இலக்​கி​யத்​தில் பண்​டைத்​தமிழர் வாழ்​வியல்’ எனும் இந்​நூல் சமகால சமூக வாசிப்​பாக அமை​கிறது. இந்நூலில், 484 பக்​கங்​களில் அமைந்த 50 கட்​டுரைகள், சங்க இலக்​கியப் பாடல்​களை நுட்​ப​மாக வாசித்​து, இன்​றைய காலத்​தன்​மையோடு ஒப்​பிட்டு எழுதப்​பட்​டுள்​ளன.

இயற்கை அறி​வியல் கூறுகள் தமிழர் வாழ்​வோடு இயைந்து சென்​றமையை அழகாகச் சுட்​டு​கிறார். நிலம், நீர், தாவரங்​கள், விலங்​கு​கள் குறித்த பதிவு​களை அறி​வியலும் மானிட​வியலும் சார்ந்து விளக்​கப்​படுத்​துகிறார். புழங்கு பொருள்​கள், உணவு, வழி​பாடு, சடங்​கு​கள், வழக்​காறுகள் முதலியவை பண்​பாட்டு வாழ்​வாக உருக்​கொள்​வதை மிக இயல்​பாகச் சுவைபட கூறுகிறார்.

Loading content, please wait...

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in