எளிய நடையில் அரிய கருத்துகள்​..! | நூல் வெளி

எளிய நடையில் அரிய கருத்துகள்​..! | நூல் வெளி
Updated on
1 min read

இதி​காசங்​களி​லும் சாஸ்​திரங்​களி​லும் கூறப்​பட்​டுள்ள தர்ம நெறிகளை அனை​வரும் பின்​பற்ற வேண்​டியது அவசி​யம். கல்வி பயிலும் மாணவர்​களுக்குச் சிறு​வய​திலேயே ஆத்​திச்​சூடி போன்ற நீதிநூல்​களைக் கற்​பித்​தால் அவற்​றில் உள்ள நல்ல செய்​தி​கள் அவர்​களின் மனதில் பதி​யும். அவர்​களது வாழ்க்​கைப் பாதை அறவழி​யில் நிச்​சய​மாகச் செல்​லும்.

சாஸ்​திரங்​களில் கூறப்​பட்​டுள்ள அறநெறிகளை மக்​களிடம் கொண்டு சேர்ப்​ப​தில், காஞ்சி ஸ்ரீமடம் முனைப்​புடன் இருப்​பது அனை​வரும் அறிந்​ததே. தமிழில் உள்ள நீதிநூல்​களில் சிறப்​பிடம் பெறு​வ​தான திருக்​குறளில் மாணவர்​கள் பயிற்​சி​யும் தேர்ச்​சி​யும் பெற வேண்​டும் என்ற நோக்​கத்​தில் திருக்​குறள் ஒப்​பித்​தல் போட்டி முதலானவற்றை ஸ்ரீமடம் நடத்​தி​யுள்​ளது.

திருக்​குறளுக்கு உரிய பழைய உரைகளைத் தொகுத்​து, புல​வர் வே.ம​காதேவ​னால் இயற்​றப் பெற்ற ‘திருக்​குறள் உரைக்​கோவை’ என்ற நூல், நூறு குறட்​பாக்​களுக்​குரிய விளக்​கங்​களு​டன் ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடம் சார்​பில் 2 தொகு​தி​களாக வெளி​யிடப்​பட்​டுள்​ளது. இந்​நூலில் அறத்​துப்​பாலின் கீழ் உள்ள அதி​காரங்​கள் முழு​மை​யாக அலசி ஆராயப்​படு​கின்​றன. இலக்​கியச் செய்​தி​கள் மட்​டுமல்​லாமல் பல இலக்​கணச் செய்​தி​களும் நூலில் நயம்பட எடுத்​துக் கூறப்​பட்​டுள்​ளன.

Loading content, please wait...

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in