

கடந்த 2004ஆம் ஆண்டில் முனைவர் பட்ட ஆய்வாளராக, ஜான் டூயியின் தத்துவத்தில் ஆழமாக மூழ்கியிருந்தேன். கருத்தரங்கம் ஒன்றில் பங்கேற்றபோது, டூயியின் இந்திய மாணவரான பீமாராவ் அம்பேத்கர் குறித்து எனக்கு என்ன தெரியும் என்கிற கேள்வியை அமெரிக்கத் தத்துவ அறிஞர் மாத்தநஸ்பாம் எழுப்பினார்.
அம்பேத்கர் குறித்து அதிகம் சொல்லத் தெரியாதவராய் அன்று நான் வெறுமனே முணுமுணுத்தேன். ஆனாலும், இதற்கான விடைகள் டூயியின் சிந்தனையில் இருப்பதாகத் தன்னம்பிக்கையுடன் இருந்தேன்.
பத்தாண்டுகள் கழித்து, பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தில் ஓர் ஆராய்ச்சிப் படிப்புக்கான ஊக்கத்தொகைக்குப் புத்தகம் ஒன்றை எழுதவிருந்தேன். முறைப்படி டூயி மற்றும் அலங்காரநடை தொடர்பாக அப்போது புத்தகம் எழுத வேண்டிய நான் அந்தத் திட்டத்தைத் தள்ளிப்போட்டுவிட்டு மாத்தநஸ்பாமை மிகவும் கவர்ந்த டூயியின் மாணவரைப் பற்றிய ஆராய்ச்சியில் இறங்கினேன்.
அம்பேத்கர் குறித்துத் தொடக்கத்தில் நுனிப்புல் மேய்வதுபோன்ற மேலோட்டமான தேடலில் ஈடுபட்டபோதே எனது அறிவார்ந்த பாதை பலவிதங்களில் மாறிப்போயிருந்தது; எனது வாழ்க்கையும்தான்.