

கேரளாவில் உள்ள தலச்சேரியில் 1905இல் பிறந்த ஆனந்த ஷெனாய், பின்னாட்களில் ‘ஆனந்த தீர்த்தர்’ ஆனது வெறும் பெயர் மாற்ற நிகழ்வல்ல; அதை ஒரு சன்னியாச வாழ்க்கையின் தொடக்கமாகச் சுருக்கிவிடவும் முடியாது.
பொதுவெளியில் நடமாடுவதிலிருந்து பல அடிப்படை உரிமைகள் பறிக்கப்பட்டிருந்த பட்டியல் சாதியினரின் மீட்சிக்காக மிக எளிமையான மனிதர் ஒருவர், தன் வாழ்நாள் முழுவதும் நடத்திய போராட்டம் அதன் பின்னணியில் உள்ளது.