

பலராலும் பார்க்கப்படாத அல்லது பார்த்தும், பார்த்ததை ஒப்புக்கொள்ளாத ஒன்றே கவிஞனின் கருவாக அமையும். அந்த வரிசையில் கவிஞர் புன்னகை பூ ஜெயக்குமார் ‘அஞ்சலக்கா’ என்ற படிமத்தால் தூய்மைப் பணியாளர்களும் மனிதர்கள்தான் என்பதை நிலைநாட்ட முயற்சி செய்கிறார்.
அதன் பிரதிபலிப்பே ‘அஞ்சலக்கா’ கவிதைத்தொகுப்பு. இதில் 72 தலைப்புகளில் கவிதைகள் அமைந்துள்ளன. இத்தொகுப்பு தூய்மைப் பணியாளர்கள் சக மனிதர் என்றில்லை சக உயிரினம் என்றுகூட பொதுமக்களிடையே தோன்றுவதில்லை என்ற கசப்பான உண்மையைக் காட்சிப்படுத்துகிறது.
ஆதரவற்றோருக்கு இயற்கையே துணை என்றாலும் சில நேரங்களில் இயற்கையும் அவர்களைப் பார்க்க மறுத்து விடுகிறது. எனினும் அவர்கள் தங்கள் வேலையைச் செய்துகொண்டே உள்ளனர்.