

சங்க இலக்கிய எட்டுத்தொகையுள் ‘நற்றிணை நல்ல குறுந்தொகை’க்குப் பின் அடுக்கப்படும் நூல் ஐங்குறுநூறு. அகப்பொருள் பாடும் இந்நூலுக்கு 2019இல் பேரா. கனலி த.விஜயலட்சுமி கவிதையுரை எழுதியுள்ளார்.
ஐங்குறுநூற்றையும் இந்தக் கவிதையுரையையும் அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்ட ஆய்வுக் கட்டுரைகளின் தொகுப்பே ‘ஐங்குறுநூறு - புதிர் விடுத்துப் புரிந்துகொள்ளுதல்’ என்னும் நூலாகும்.
கேரளப் பல்கலைக்கழகத்தில் இதே தலைப்பில் நடந்த பயிலரங்கின் வாயிலாக உருவான இக்கட்டுரைகளை த.விஜயலட்சுமி தொகுத்து, முன்னுரையும் முதற்கட்டுரையும் தந்துள்ளார்.