

வைணவ உலகுக்குப் பெருமை சேர்க்கும் தத்துவப் பொக்கிஷமாகத் திகழ்வது, பகவத் ராமானுஜரிடம் திருக்கோளூர் பெண் பிள்ளை உரைத்த ரகசிய வார்த்தைகளாகும்.
தாமிரபரணி நதிக்கரையில் அமைந்துள்ள 108 திவ்ய தேசங்களுள் ஒன்றானதும், நவதிருப்பதிகளில் செவ்வாய் தலமாகப் போற்றப்படுவதுமான திருக்கோளூரில் வைத்தமாநிதி பெருமாள் சயன கோலத்தில் எழுந்தருளியுள்ளார்.