

ம. மதிவண்ணன், ‘நெரிந்து’ கவிதைத் தொகுப்பு மூலம் தமிழ் இலக்கியத்துக்குள் அறிமுகமானவர். 4 கவிதைத் தொகுப்புகள், 7 கட்டுரைத் தொகுப்புகள், 5 மொழிபெயர்ப்புகள், ஒரு ஆய்வு நூல் ஆகியவை வெளிவந்துள்ளன. உள்ஒதுக்கீடு கோரிக்கையின் நியாயங்களை விவாதங்களாக முன்வைத்து இவர் எழுதிய நூல்கள், அருந்ததியர் உள் ஒதுக்கீடு கோரிக்கை வெற்றி பெறுவதற்குப் பெரிதும் துணைநின்றன.
அருந்ததியர் சமூக வரலாறு பற்றி அவர் எழுதிய ‘சக்கிலியர் வரலாறு’ நூல் தமிழக ஆய்வுத் தளத்தில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. சரண்குமார் லிம்பாலே எழுதிய ‘கும்பல்’ நாவல் மதிவண்ணன் மொழிபெயர்ப்பில் கருப்புப் பிரதிகள் (அரங்கு எண்: 555, 556) வெளியீடாக வந்துள்ளது.