திருமண நிகழ்ச்சியில் மணப்பெண் மீது பண மழை பொழிந்த மணமகன் வீட்டார்

திருமண நிகழ்ச்சியில் மணப்பெண் மீது பண மழை பொழிந்த மணமகன் வீட்டார்
Updated on
1 min read

சண்டிகர்: பஞ்​சாப் மாநிலம் தரந்​தரன் பகு​தி​யில் அண்​மை​யில் ஒரு திருமண நிகழ்ச்சி நடை​பெற்​றது. இந்த திருமண வரவேற்பின் ​போது மண்​டபத்​துக்கு வந்த மணமகள் மீது மணமகன் வீட்​டார் லட்​சக்​கணக்​கான ரூபாய் நோட்​டு​களை வாரி இறைத்​தனர்.

அப்​போது சுமார் ரூ.8.5 கோடி மதிப்​புள்ள ரூபாய் நோட்​டு​களை மணமகள் மீது மணமகன் வீட்​டார் இறைத்​த​தாக சிலர் தெரிவித்தனர். ஆனால் சிலரோ ரூ.2 லட்​சம் முதல் ரூ.4 லட்​சம் வரையி​லான கரன்சி நோட்​டு​கள் மட்​டுமே வாரியிறைக்கப்பட்டன என்று தெரி​வித்​தனர். இருந்​த​போதும் இந்த வீடியோ சமூக வலை​தளத்​தில் வைரலாகி வரு​கிறது.

இதுகுறித்து சமூக வலை​தளத்​தில் ஒரு​வர், “இது அவர்​களு​டைய சொந்​தப் பயணம். அவர்​கள் விரும்​பும் வகை​யில் அவர்​கள் அதைச் செய்​துள்​ளனர். இதை குறை சொல்​லக்​கூ​டாது" என் பதிவிட்டுள்ளாார். மற்​றொரு​வர், "இந்​தப் பணத்தை இங்கு வாரி இறைப்​பதை விட தேவைப்​படு​பவர்​களுக்கோ அல்​லது ஏழை மக்களுக்கோ கொடுத்து உதவி​யிருக்​கலாம்" என்​றார்.

திருமண நிகழ்ச்சியில் மணப்பெண் மீது பண மழை பொழிந்த மணமகன் வீட்டார்
திமுக கூட்டணியில் தேமுதிக - பிரேமலதா ‘டிக்’ செய்தது ஏன்?

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in