15 ஆண்டுகளுக்கு முன் காணாமல் போன முன்னாள் ராணுவ வீரர் வீடு திரும்பினார்

15 ஆண்டுகளுக்கு முன் காணாமல் போன முன்னாள் ராணுவ வீரர் வீடு திரும்பினார்
Updated on
1 min read

புதுடெல்லி: இ​மாச்சல பிரதேசத்​தின் சுஜன்​பூர் மாவட்​டம் கர்​தோலி கிராமத்​தைச் சேர்ந்​தவர் பல்​தேவ் குமார். முன்​னாள் ராணுவ வீர​ரான இவர் 15 ஆண்​டு​களுக்கு முன் வேலை​தேடி வீட்டை விட்டு வெளி​யேறி​னார்.

பிறகு இவரை காண​வில்​லை. அவரை கண்​டு​பிடிக்க முடி​யாத​தால் மன உளைச்​சலுக்கு ஆளான அவரது குடும்​பத்​தினர், பல்​தேவ் இறந்​திருக்​கலாம் என்ற முடிவுக்கு வந்​து​விட்​டனர்.

இந்​நிலை​யில் ராஜஸ்​தானின் பிகானீர் நகரில் உள்ள ஒரு குடும்​பத்​தினர் அண்​மை​யில் ஒரு நபரின் வீடியோவை சமூக ஊடகத்​தில் பகிர்ந்​து, அவரை அடை​யாளம் காண உதவு​மாறு கேட்​டுக்​கொண்​டனர்.

இந்த வீடியோ சுஜன்​பூரில் சப்னா குமாரி என்​பவருக்கு எட்​டியது. அதை அவர் உள்​ளூர் குழுக்​களில் பகிர்ந்து கொண்​டார். அதை பல்​தேவ் குமாரின் குடும்​பத்​தினரும் பார்த்து முதலில் திகைத்​துப் போயினர். இறந்​திருக்​கலாம் என கருதப்​பட்ட தங்​கள் மகன் உயிருடன் இருப்​பதை பார்த்து நெகிழ்ச்சி அடைந்​தனர். பிறகு பல்​தே​வின் அடை​யாளத்தை உறுதி செய்து கொண்ட குடும்​பத்​தினர் பிகானீர் புறப்​பட்டு சென்​றனர். அங்கு பல்​தேவை நேரில் கண்டு ஆனந்​தக் கண்​ணீர் வடித்​தனர்.

ராஜஸ்​தான் குடும்​பத்​தினர் பல ஆண்​டு​களாக அவரைப் பராமரித்து வரு​வ​தாக தெரி​வித்​தனர். அவர்​களுக்கு நன்றி தெரி​வித்​து​விட்டு பல்​தேவை வீட்​டுக்​கு அழைத்​து வந்​தனர்​.

15 ஆண்டுகளுக்கு முன் காணாமல் போன முன்னாள் ராணுவ வீரர் வீடு திரும்பினார்
பாகிஸ்தானின் பகவல்பூரில் தீவிரவாதிகள் ஆலோசனை

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in