

இந்தியாவின் மறக்க முடியாத குடியரசுத் தலைவராக வரலாற்றில் பதிவு செய்த ஏ.பி.ஜெ.அப்துல் கலாம் மாணவர்களின் தலைவராக பார்க்கப்பட்டு வருகிறார். இந்திய ஏவுகணையின் தந்தை என்று அழைக்கப்படும் அப்துல் கலாம் 1931 ஆம் ஆண்டு ஜைனுலாப்தீனுக்கும், ஆஷியம்மாவுக்கும் மகனாக இராமேஸ்வரத்தில் பிறந்தார். வறுமையான சூழலிலும் படிப்பை கைவிடாது பிடித்துக்கொண்ட அப்துல் கலாம் விண்வெளி பொறியியல் படிப்பை சென்னையிலுள்ள எம்.ஐ.டி-யில் படித்தார்.
1960-ஆம் ஆண்டு வானூர்தி அபிவிருத்தி அமைத்தல் பிரிவில் விஞ்ஞானியாக ஆராய்ச்சியை தொடங்கிய அப்துல் கலாமின் பயணம் இந்திய விண்வெளி ஆராய்ச்சிக் கூடமான இஸ்ரோ வரை தொடர்ந்தது. ரோகிணி 1 ஏவுகணை, பொக்ரான் சோதனை போன்றவற்றை முன்னின்று நடத்தி நாட்டிற்கு பெருமை சேர்ந்தார். 2002-ஆம் ஆண்டு இந்தியாவின் குடியரசுத் தலைவராக தேர்ந்தெடுக்கபட்ட அப்துல் கலாம் மக்களின் கொண்டாட்டத்துக்குரிய குடியரசுத் தலைவராக பணியாற்றினார். அத்தகைய ஆளுமையின் சிறந்த 10 மேற்கோள்கள்...
அக்டோபர் 15 - அப்துல் கலாம் பிறந்த தினம்