செங்கல்பட்டு: உடல் உறுப்பு தானம் செய்த 150 ஆட்டோ ஓட்டுநர்கள்

விழிப்​புணர்வு நிகழ்ச்​சி​யில் பங்கேற்று உடல் உறுப்பு தானம் செய்த ஆட்டோ ஓட்டுநர்கள்.

விழிப்​புணர்வு நிகழ்ச்​சி​யில் பங்கேற்று உடல் உறுப்பு தானம் செய்த ஆட்டோ ஓட்டுநர்கள்.

Updated on
1 min read

செங்கல்பட்டு: செங்​கல்​பட்​டில் நடை​பெற்ற உடல் உறுப்பு தானம் குறித்த விழிப்​புணர்வு நிகழ்ச்​சி​யில் பங்​கேற்று ஆட்டோ ஓட்​டுநர்​கள் 150 பேர் தங்​கள் உடல் உறுப்புகளை தானம் செய்ய ஒப்​புதல் அளித்து அடை​யாள அட்​டையை பெற்​றனர்.

செங்​கல்​பட்டு ராஜேஸ்​வரி வேதாச்​சலம் அரசினர் கலைக் கல்​லூரி​யில் 1970 முதல் 2020 வரை பயின்ற முன்​னாள் மாணவர்​கள் ஒருங்​கிணைந்​து, ராஜேஸ்​வரி வேதாச்​சலம் கல்​லூரி கோல்​டன் ஜூப்ளி அலுமினி அசோசி​யேஷனை நடத்தி வரு​கின்​றனர்.

இச்​சங்​கம் கல்​லூரிக்​கும், அப்​பகுதி மக்​களுக்​கும் பல நலத்​திட்ட உதவி​களை செய்து வரு​கிறது. இதன் தொடர்ச்​சி​யாக, உடல் உறுப்பு தானம் குறித்த விழிப்​புணர்வை வலி​யுறுத்தி “செங்கை மெகா மாரத்​தான்” போட்​டியை நேற்று நடத்​தி​யது.

இதனை செங்​கல்​பட்டு மருத்​து​வக் கல்​லூரி மருத்​து​வ​மனை முதல்​வர் பிரியா பசுபதி கொடியசைத்து தொடங்கி வைத்​தார். செங்​கல்​பட்டு செயின்ட் கொலம்​பஸ் மேல்​நிலைப் பள்​ளி​யில் தொடங்கி செங்கை எஸ்பி அலு​வல​கம் அரு​கிலுள்ள மைதானத்​தில் நிறைவடைந்​தது.

இதில் ஏராள​மானோர் பங்​கேற்​றனர். இறு​தி​யாக, வெற்றி பெற்​றவர்​களுக்​கும், அதிக அளவி​லான மாணவர்​களை ஆர்​வத்​துடன் கலந்து கொள்ள செய்த பள்ளி நிர்​வாகத்​திற்கு நினைவு பரிசுகளும், கோப்​பைகளும், சான்​றிதழ்​களும் வழங்​கப்​பட்​டன. உடல் உறுப்பு தானத்​திற்கு முதல்​முறை​யாக வித்​திட்ட செங்​கையை சேர்ந்த மருத்​து​வர் அசோகன் கவுரவிக்​கப்​பட்​டார்.

நிகழ்ச்​சி​யில், செங்​கல்​பட்டு மற்​றும் அதனை சுற்​றி​யுள்ள சுமார் 150 ஆட்டோ ஓட்​டுநர்​கள் விழிப்​புணர்வு நிகழ்ச்​சி​யில் பங்​கேற்று தங்​கள் உடல் உறுப்​பு​களை தானம் செய்ய ஒப்​புதல் அளித்து அடை​யாள அட்​டையை பெற்​றுள்​ளனர்.

ஆட்டோ ஓட்​டுநர்​களின் இந்த செயலை அனை​வரும் பாராட்​டினர். இதே​போல், பொது​மக்​கள் 100-க்​கும் மேற்​பட்​ட​வர்​கள் தங்​கள் உடல் உறுப்​பு​களை தானம் செய்ய ஒப்​புதல் அளித்​துள்​ளனர்.

நிகழ்ச்​சி​யில், செயின்ட் கொலம்​பஸ் மேல்​நிலைப் பள்ளி தலை​மை​யாசிரியை பியூலா சுகுணசீலி மானுவல், செங்​கல் பட்டு நகராட்சி தலை​வர் தேன்மொழி, துணை காவல் கண்​காணிப்​பாளர் எஸ். கங்​காதரன், முன்​னாள் கல்​லூரி முதல்​வர் முனை​வர் பி.கே. கில்​லிவளவன், வணி​கர் சங்​கம் தலை​வர் எஸ். உத்​திரகு​மார், ராஜேஸ்​வரி வேதாச்​சலம் கல்​லூரி முன்​னாள் மாணவர்​கள் சங்க நிர்​வாகி​கள் லட்​சுமி நம்​பி​யார், ஜே. ஜான்​சன், ஏ. பாஸ்​கரன் மற்​றும் மருத்​து​வர்​கள், லயன்​ஸ் கிளப்​ நிர்​வாகி​கள்​ உள்​ளிட்​ட பலர்​ பங்​கேற்​றனர்​.

<div class="paragraphs"><p>விழிப்​புணர்வு நிகழ்ச்​சி​யில் பங்கேற்று உடல் உறுப்பு தானம் செய்த ஆட்டோ ஓட்டுநர்கள்.</p></div>
வீட்டுக்குள் இழுத்துச் சென்று மாணவிக்கு பாலியல் துன்புறுத்தல்: ஆட்டோ ஓட்டுநர் மீது வழக்குப் பதிவு

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in