அகஸ்தியாவின் பரிசால் நெகிழ்ந்த ஹர்திக் பாண்டியா!

அகஸ்தியாவின் பரிசால் நெகிழ்ந்த ஹர்திக் பாண்டியா!
Updated on
1 min read

இந்திய கிரிக்கெட் அணியின் ஆல்ரவுண்டரான ஹர்திக் பாண்டியா நேற்று முன்தினம் டெல்லியில் நடைபெற்ற ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்துக்கு முன்னதாக மைதானத்திலேயே கேக் வெட்டி தனது 30-வது பிறந்த நாளை கொண்டாடினார்.

முன்னதாக, அன்றைய தினம் காலையில் ஹர்திக் பாண்டியாவின் குழந்தை அகஸ்தியா, தனது அப்பாவுக்கு வாழ்த்து கூறி பரிசு வழங்கி உள்ளார். அகஸ்தியா தனது கைகளால் செய்த வாழ்த்து அட்டையில், “பெரிய மனது, பெரிய கொண்டாட்டத்துக்கு தகுதியானது. உலகின் தலைசிறந்த பாப்பாவுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்” என்று எழுதப்பட்டிருந்தது.

இதுதொடர்பான வீடியோவை ஹர்திக் பாண்டியா இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில் அவர், ”மிகவும் நேசிக்கும் நபர்களுடன் காலையில் எழுந்த தருணத்தில் எனது நாள் அற்புதமாக இருக்கும் என்று எனக்குத் தெரியும். அகஸ்தியாவின் ஓவியம் என் இதயத்தை உருக்கியது மற்றும் நான் கேட்டிருக்கக்கூடிய சிறந்த பிறந்தநாள் பரிசாகவும் இருந்தது. அனைவரின் அன்புக்கும், வாழ்த்துகளுக்கும் நன்றி” எனத் தெரிவித்துள்ளார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in