“உங்களிடம் சமையலறை கருவிகள் உள்ளன” - எஸ்ஐஆருக்கு எதிராக போராட பெண்களுக்கு மம்தா அழைப்பு

மம்தா பானர்ஜி | கோப்புப் படம்.
மம்தா பானர்ஜி | கோப்புப் படம்.
Updated on
1 min read

கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் நடைபெறும் வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்தம் (எஸ்ஐஆர்) குறித்து கடுமையாக விமர்சித்த திரிணமூல் காங்கிரஸ் தலைவரும், முதல்வருமான மம்தா பானர்ஜி, எஸ்ஐஆர் பணியின்போது உங்கள் பெயர் நீக்கப்பட்டால், சமையலறைப் பொருட்களுடன் தயாராக இருக்குமாறு பெண்களுக்கு அழைப்பு விடுத்தார்.

மேற்கு வங்கத்தின் கிருஷ்ணாநகரில் நடந்த ஒரு பேரணியில் பேசிய மம்தா பானர்ஜி பேசியதாவது: எஸ்ஐஆர் என்ற பெயரில் தாய்மார்கள் மற்றும் சகோதரிகளின் உரிமைகளைப் பறிப்பீர்களா?. தேர்தலின் போது டெல்லியில் இருந்து காவல்துறையினரை வரவழைத்து தாய்மார்களையும், சகோதரிகளையும் அச்சுறுத்துவார்கள்.

தாய்மார்களே, சகோதரிகளே, உங்கள் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டால், உங்களிடம் சமையலுக்குப் பயன்படுத்தும் கருவிகள் இருக்கின்றன அல்லவா?. உங்களிடம் சக்தி இருக்கிறது அல்லவா?. உங்கள் பெயர்கள் நீக்கப்பட்டால், அதை நீங்கள் சும்மா விடமாட்டீர்கள் அல்லவா?. அப்போது பெண்கள் முன்னணியில் நின்று போராடுவார்கள், ஆண்கள் அவர்களுக்குப் பின்னால் இருப்பார்கள்.

பெண்களா அல்லது பாஜகவா, யார் அதிக சக்தி வாய்ந்தவர்கள் என்பதைப் பார்க்க விரும்புகிறேன். நான் மதவாதத்தை நம்புவதில்லை. நான் மதச்சார்பின்மையை நம்புகிறேன். தேர்தல் வரும்போதெல்லாம், பாஜக பணத்தைப் பயன்படுத்தி, மக்களைப் பிளவுபடுத்துவதற்காக மற்ற மாநிலங்களில் இருந்து ஆட்களை அழைத்து வர முயற்சிக்கிறது.

தேவைப்படும்போதெல்லாம் நாம் அனைவரும் வீட்டில் கீதையைப் பாராயணம் செய்கிறோம். அதற்கு ஏன் ஒரு பொதுக் கூட்டத்தை ஏற்பாடு செய்ய வேண்டும்?. கடவுள்கள் இதயத்தில் வசிக்கிறார்கள். அல்லாவிடம் பிரார்த்தனை செய்பவர்களும் தங்கள் இதயங்களில் செய்கிறார்கள்.

ரம்ஜான் மற்றும் துர்கா பூஜையின் போது, ​​நாம் ஒன்றாகப் பிரார்த்தனை செய்கிறோம். கீதையைப் பற்றி முழக்கமிடுபவர்களிடம், பகவான் கிருஷ்ணர் என்ன சொன்னார் என்று நான் கேட்க விரும்புகிறேன். தர்மம் என்பது தூய்மை, மனிதநேயம், அமைதி ஆகியவற்றைக் குறிக்கிறது, வன்முறை, பாகுபாடு மற்றும் பிளவைக் குறிக்காது.

ராமகிருஷ்ண பரமஹம்சர், சுவாமி விவேகானந்தர், ரவீந்திரநாத் தாகூர் மற்றும் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் போன்ற மாபெரும் ஆளுமைகள் மக்களைப் பிளவுபடுத்தவில்லை. அப்படியானால் நீங்கள் யார்?. இவ்வாறு அவர் பேசினார்.

மம்தா பானர்ஜி | கோப்புப் படம்.
திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபமேற்ற வலியுறுத்தி டிச.13-ல் உண்ணாவிரதம்: ஐகோர்ட் அனுமதி

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in