

ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் பன்ஸ்வாரா மாவட்டத்தை சேர்ந்த பெண் ஒருவர் மகளிர் காவல் நிலையத்தில் கடந்த வெள்ளிக்கிழமை புகார் அளித்தார்.
அதில், குவைத்தில் உள்ள தனது கணவர் கடந்த மே 17ம் தேதி தனக்கு வாடஸ்-அப் மூலம் முத்தலாக் கூறி திருமண உறவை முடித்துக் கொண்டதாக கூறியுள்ளார். இது குறித்து மகளிர் காவல் நிலைய அதிகாரி ஊர்மிளா கூறுகையில், “பெண்ணின் கணவர் ஆஷிக் இக்பால் என அடையாளம் காணப்பட்டுள்ளார். அவர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளோம்" என்றார்.