நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நிறைவு

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நிறைவு
Updated on
1 min read

புதுடெல்லி: நா​டாளு​மன்ற குளிர்​கால கூட்​டத் தொடர் நேற்​றுடன் நிறைவுப் பெற்​றது.

கடந்த 1-ம் தேதி நாடாளு​மன்ற குளிர்​கால கூட்​டத் தொடர் தொடங்​கியது. முதல் நாளில் எஸ்​ஐஆர் விவ​காரத்தை எழுப்பி நாடாளு​மன்​றத்​தின் இரு அவை​களை​யும் எதிர்க்​கட்​சிகள் முடக்கின. இரண்​டாவது நாளும் இதே நிலை நீடித்​தது.

இதுதொடர்​பாக மக்​கள​வைத் தலை​வர் ஓம் பிர்​லா, எதிர்க்​கட்சி எம்​பிக்​களு​டன் பேச்​சு​வார்த்தை நடத்​தி​னார். இதில் சுமுக உடன்​பாடு எட்​டப்​பட்​டது. இதன்​படி வந்தே மாதரம் தேசிய பாடல் குறித்​தும், எஸ்​ஐஆர் குறித்​தும் நாடாளு​மன்​றத்​தின் இரு அவை​களி​லும் கடந்த 8, 9 ஆகிய தேதி​களில் விரி​வான விவாதம் நடை​பெற்​றது.

குளிர்​கால கூட்​டத் தொடரின்​போது மக்​களவை​யில் 12 மசோ​தாக்​கள் அறி​முகம் செய்​யப்​பட்​டன. இதில், புதிய ஊரக வேலை உறுதி திட்ட (விபி-ஜி ராம் ஜி) மசோதா உட்பட 8 மசோ​தாக்​கள் நிறைவேற்​றப்​பட்​டன. இதே​போல மாநிலங்​களவை​யில் 8 மசோ​தாக்​கள் நிறைவேற்​றப்​பட்​டன.

இந்த சூழலில் 15-வது நாளாக நாடாளு​மன்​றம் நேற்று கூடியது. காலை 11 மணிக்கு மக்​களவை கூடியதும் வந்தே மாதரம் தேசிய பாடல் இசைக்​கப்​பட்​டது. இதைத் தொடர்ந்து அவைத் தலை​வர் ஓம் பிர்லா தேதி குறிப்​பி​டா​மல் மக்​களவையை ஒத்​தி​வைத்​தார். அவை​யின் செயல்​பாடு 111 சதவீதம் என்ற உயர்ந்த அளவில் இருந்​த​தாக ஓம் பிர்லா தெரி​வித்​தார்.

இதன்​பிறகு மக்​கள​வைத் தலை​வர் ஓம் பிர்​லா​வின் அறை​யில் தேநீர் விருந்து அளிக்​கப்​பட்​டது. இதில் பிரதமர் நரேந்​திர மோடி, மத்​திய அமைச்​சர்​கள், காங்​கிரஸ் பொதுச்​செய​லா​ளர் பிரி​யங்கா மற்​றும் எதிர்க்​கட்சி எம்​பிக்​கள் பங்​கேற்​றனர்.

மாநிலங்​களவை நேற்று காலை 11 மணிக்கு கூடியது. அப்​போது மாநிலங்​களவை​யும் தேதி குறிப்​பிடப்​ப​டா​மல் ஒத்​திவைக்​கப்​பட்​டது. அவைத் தலை​வர் சி.பி.​ரா​தாகிருஷ்ணன் கூறும்​போது, “கடந்த வியாழக்​கிழமை மத்​திய அமைச்​சர் அவை​யில் பதில் அளித்து கொண்​டிருந்​த​போது எதிர்க்​கட்சி உறுப்​பினர்​கள் கடும் அமளி​யில் ஈடு​பட்​டனர். தாள்​களை கிழித்து எறிந்​தனர். அவை​யின் மாண்பை சீர்​குலைக்​கும் வகை​யில் செயல்​பட்​டனர். இதை வன்​மை​யாகக் கண்​டிக்​கிறேன். எனினும் ஒட்​டுமொத்​த​மாக மாநிலங்​களவை அலு​வல்​கள் ஆக்​கப்​பூர்​வ​மாக அமைந்​தன. அவை​யின் செயல்​பாடு 121 சதவீத​மாக இருந்​தது. அடுத்து வரும் கூட்​டத்​தொடர்​களி​லும் அர்த்​த​முள்ள விவாதங்​கள் நடை​பெற வேண்​டும்” என்று தெரி​வித்​தார்.

ஏற்​கெனவே அறி​வித்​த​படி நாடாளு​மன்ற குளிர்​கால கூட்​டத் தொடர் நேற்​றுடன் நிறைவுப் பெற்​றது. அடுத்த ஆண்டு ஜனவரி 31-ம் தேதி நாடாளு​மன்ற பட்​ஜெட் கூட்​டத் தொடர் தொடங்க உள்​ளது. பிப்​ர​வரி 1-ம் தேதி மத்​திய பட்​ஜெட் தாக்​கல் செய்​யப்பட உள்​ளது. ஏப்​ரல் 4-ம் தேதி வரை இரு கட்​டங்​களாக பட்​ஜெட்​ கூட்​டத்​ தொடர்​ தொடர்ந்​து நடை​பெறும்​.

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நிறைவு
சபாநாயகர் அளித்த தேநீர் விருந்தில் ராகுல் வராத நிலையில் பிரியங்கா பங்கேற்பு

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in