தேசிய சிறார் விருது பெற்ற ஷ்ரவன் சிங் யார்?

தேசிய சிறார் விருது பெற்ற ஷ்ரவன் சிங் யார்?

Published on

புதுடெல்லி: பஞ்​சாபின் பெரோஸ்​பூர் மாவட்​டம், மம்​டோட் கிராமத்தை சேர்ந்​தவர் சோனா சிங். இவரது மனைவி சந்​தோஷ் ராணி. பாகிஸ்தான் எல்​லை​யில் இருந்து 2 கி.மீ. தொலை​வில் மம்​டோட் கிராமம் உள்​ளது. அங்கு ஒரு ஏக்​கர் நிலம் வைத்​திருக்​கும் சோனா சிங் விவ​சா​யத்​தில் ஈடு​பட்டு வரு​கிறார்.

காஷ்மீரின் பஹல்​காம் தீவிர​வாத தாக்​குதலுக்கு பதிலடி​யாக கடந்த மே 7-ம் தேதி முதல் 10-ம் தேதி வரை ஆபரேஷன் சிந்​தூர் ராணுவ நடவடிக்கை மேற்​கொள்​ளப்​பட்​டது. அப்​போது மம்​டோட் கிராமத்​தில் சோனி சிங்​கின் விவ​சாய நிலத்​தில் இந்​திய ராணுவ வீரர்​கள் முகாமிட்டு பாகிஸ்​தானுக்கு எதி​ராக போரில் ஈடு​பட்​டனர்.

பாகிஸ்​தான் ராணுவம் குண்​டு மழையை பொழிந்து கொண்​டிருந்​த​போது, அதற்கு அஞ்​சாமல் சோனா சிங்​கின் 10 வயது மகன் ஷ்ரவன் சிங் துணிச்​சலாக போர் முனைக்​குச் சென்று இந்​திய ராணுவ வீரர்​களுக்கு குடிநீர், பால், மோர், தேநீர், உணவு வகைகளை வழங்கி​னார். இதற்​காக ராணுவத்​தின் சார்​பில் இளம் சிவில் வீரர் என்ற விருது ஷ்ர​வன் சிங்​குக்கு வழங்​கப்​பட்​டது.

இந்த சூழலில் வீர, தீர செயலுக்காக அவருக்கு நேற்று முன்​தினம் தேசிய சிறார் விருதை குடியரசுத் தலை​வர் திர​வுபதி முர்மு வழங்​கி​னார். இதுகுறித்து ஷ்ர​வன் சிங் கூறும்​போது, “நான் அரசு பள்​ளி​யில் 5-ம் வகுப்பு படிக்​கிறேன். ஆபரேஷன் சிந்​தூரின்​போது ராணுவ வீரர்​கள் எங்​கள் கிராமத்​தில் முகாமிட்​டனர். அவர்களுக்கு தேநீர் உள்​ளிட்ட பானங்​கள் மற்​றும் உணவு வழங்கினேன். இதை பாராட்டி எனக்கு விருது வழங்​கப்​பட்டு இருக்கிறது. நான் பெரிய​வ​னாக வளர்ந்த பிறகு ராணுவத்​தில் சேர்ந்து நாட்​டுக்கு சேவை​யாற்​று​வேன்’’ என்று தெரி​வித்​தார்.

சோனா சிங் கூறும்​போது, “எனது மகனுக்கு 4 வயதாக இருக்​கும்​போது நீரிழிவு நோய் இருப்​பது கண்​டறியப்​பட்​டது. அவனது மருத்​துவ சிகிச்​சைக்​காக அதிக தொகையை செலவு செய்​கிறேன். எனது ஒரு ஏக்​கர் நிலத்​தில் விவ​சா​யம் செய்து வாழ்க்​கையை நடத்தி வரு​கிறேன். எனது மகன் ராணுவ வீரர்​களுக்கு தேநீர் வழங்​கி​னார். இதை பாராட்டி எனது மகனின் மருத்​து​வச் செல​வை​யும், படிப்பு செல​வை​யும் ராணுவமே ஏற்​றுக் கொண்​டிருக்​கிறது. நான் என்​றென்​றும் இந்​திய ராணுவத்​துக்​கும் மத்​திய அரசுக்​கும்​ நன்​றி​யுள்​ளவ​னாக இருப்​பேன்​’’ என்​று தெரி​வித்​தார்​.

தேசிய சிறார் விருது பெற்ற ஷ்ரவன் சிங் யார்?
அணியின் ஒட்டுமொத்த செயல்பாட்டால் வெற்றி: சொல்கிறார் ஹர்மன்பிரீத் கவுர்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in